கோவையில் செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையம் திறப்பு விழா; அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பு!

Published Date: December 16, 2024

CATEGORY: CONSTITUENCY

கோவையில் தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனியார் செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையத்தினை துவங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில்தனியார் செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையத்தினை தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார். ஏஐ நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும் நிறுவன ஊழியர்களுடன் கலந்துரையாடிய பிறகு செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் பேட்டியளித்தார்.

கோவை எல் கரண்ட் பார்க்:

அப்போது அவர் கூறுகையில் ஆட்சியாளர்களால் கிடப்பில் போடப்பட்ட கோவை எல் கரண்ட் பார்க் கடந்த மாதம் திறக்கப்பட்டது, உச்ச நீதிமன்றம் வரை சென்று அதனை திறந்துள்ளோம். 2.30 லட்சம் சதுர அடிக்கு மேல் அதில் ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் தற்போது தொடங்கப்பட்டுள்ள முழு கட்டடத்தை எடுக்க கூட சில நிறுவனங்கள் தயாராக உள்ளனர். நிறைய டிமாண்ட் உள்ள நிலையில் துறைக்கு பொறுப்பேற்ற பிறகு மாதம் ஒருமுறை வெளிநாடு சென்று மார்க்கெட் செய்து தமிழகத்திற்கு நிறுவனங்களை ஈர்த்து வருகிறேன் எனவும் தெரிவித்தார்.

ஐடி நிறுவனங்கள்:

சென்னையில் 2023-24 இல் ஒரு கோடி சதுர அடிக்கு மேல் ஐடி நிறுவனங்கள் உருவாகியுள்ளது. கோவையில் இந்த அளவிற்கு இந்த நிறுவனத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் குளோபல் வின்சிட்டி போன்ற திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களை இங்கு கொண்டுவர முயற்சி செய்து வருகின்றோம் எனவும் தெரிவித்த நிலையில் தமிழகம் முழுவதும் எல்காட், சிப்காட், மூலம் பல இடங்களில் புதிய கட்டிடத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

உற்பத்திக்கான திறன் உள்ளவர்களை நாம் உருவாக்குகின்றோம்:

துபாய் போன்ற நாடுகளில் இருப்பதைப் போலவே கோவையிலும் செயற்கை நுண்ணறிவு மாடல்கள் உருவாக்கப்பட வேண்டும், அதற்கான மாடலை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவால் வேலைவாய்ப்பு கிடைக்காமல் போக 20 ஆண்டுகளுக்கும் மேலாகும் எனவும் ஏஐ துறையில் நாம் இப்போதுதான் ஐந்தாம் வகுப்பில் இருக்கின்றோம் எனவும் குறிப்பிட்டார்.

ஏஐ தொடர்பான தகவல் பதிவேற்றம்:

ஏஐ தொடர்பான தகவல்களை பதிவேற்றம் செய்யவே பல ஆண்டுகள் தேவைப்படுகின்றது, அப்படி இருக்கையில் வேலைவாய்ப்புகள் எப்படி குறையும் அதிகரிக்கத் தான் செய்யும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் 90% அளவிற்கு தமிழர்கள் இருக்கின்றன இதுபோல பெங்களூரில் 25 சதவீதம் தான் அந்த ஊர் மக்கள் இருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

திறமை வாய்ந்தவர்கள் தமிழகத்தில் தான் அதிகம்:

திறமை வாய்ந்தவர்கள் தமிழகத்தில் தான் அதிகம் உள்ளனர். ஒவ்வொரு நகரத்திற்கும் ஒரு வாய்ப்பு இருக்கும் அதில் இந்தியாவிற்கு மென்பொருள் துறையில் அதிகமான வாய்ப்பு உள்ளது உலக அளவில் இந்த துறையில் அளவில்லா வாய்ப்பு கொட்டி கிடக்கும் நிலையில் சீனாவில் இருந்து எல்லோரும் வெளியே வாருங்கள்.

ஒன்றிய அரசிடம் நிதி மற்றும் திறன் பெறுகின்றோம்:

இங்கு மனித வளம் இருக்கின்றது எனவும் தெரிவித்தார். ஒன்றிய அரசிடம் நிதி மற்றும் திறன் உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றோம் இதுபோலவே செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதற்கு ஒரு தலைமுறை ஆகும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Media: TAMIL.SAMAYAM.COM